சென்னை: பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதி மொழி தான் உண்மையான தீர்வை தரும் என்றும், இதில் ஒன்றிய அரசு நாடகமாடுகிறது என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10க்கும் அதிகமாக உயர்த்திவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ தாண்டிய நிலையில், அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்.