சென்னை: இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு, உயிரியல் பாட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 2 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேர் என 4 பேர் முறைகேட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.