திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.