சென்னை: மே 25ல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரிகள் தீர்மானம் செய்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுளோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்