கணவர் விவாகரத்து கேட்டதால் புதுப்பெண் தூக்கிட்டு சாவு

பெரம்பூர்: கொளத்தூர் செந்தில்நகரை சேர்ந்தவர் ரேகாதேவி (38). இவருக்கு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், மதுரையை சேர்ந்த சதீசுடன் திருமணம் நடந்தது.

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதமாக கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ரேகாதேவி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‘தனது கணவர் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததுடன், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால்  தற்கொலை செய்து கொள்கிறேன்,’ என்று எழுதி இருந்தது. எனவே, அவரது கணவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: