பெரம்பூர்: கொளத்தூர் செந்தில்நகரை சேர்ந்தவர் ரேகாதேவி (38). இவருக்கு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், மதுரையை சேர்ந்த சதீசுடன் திருமணம் நடந்தது.
கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதமாக கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ரேகாதேவி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.