சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா 3 மாதங்களில் 2வது முறையாக உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை தோற்கடித்துள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்னும் செஸ் தொடர் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில் 5வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயைச் சேர்ந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்ஸனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவர், மேக்னஸ் கார்ல்ஸன் செய்த பெரும் தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 40வது நகர்த்தலின் போது வெற்றியை தன்வசமாக்கினார்.