சென்னை: ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும் ரூ.683 கோடி மதிப்பில் 10,000 தடுப்பணைகள், விவசாயிகளின் வசதிக்காக ரூ.1346 கோடி மதிப்பில் சுமார் 4000 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.