சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாதவரம் பால் பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்கள் மாற்றி இணைக்கும் பணிகள் வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, பகுதி-3க்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன்மேடு, பகுதி-4க்கு உட்பட்ட கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பெரம்பூர் (பகுதி), வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் பகுதி-6க்கு உட்பட்ட பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.