அறநிலையத்துறையில் 13 செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டுக்கான செயல் அலுவலர் நிலை 4ல் இருந்து நிலை 3க்கு பதவி உயர்வு  அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதவி உயர்வு பெற்ற செயல் அலுவலர்கள் பணி மாறுதல் அளித்து உத்தரவிடப்படுகிறது.

அதன்படி சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் செயல் அலுவலர் சத்திய நாராயணன் ஸ்ரீவில்லிப்புத்தூர் காசி விஸ்வநாதசுவாமி கோயில் செயல் அலுவலராகவும், சேரன்மகாதேவி அம்மநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் முருகன் வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் செயல் அலுவலராகவும், சூலூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மாதேஸ்வரன் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் செயல் அலுவலராகவும், அனுமன்பள்ளி அனுமனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பிரேமா பல்லடம் பொங்காளியம்மன் கோயில் செயல் அலுவலராகவும், திருவந்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வேல்விழி பண்ருட்டி அய்யனார் விநாயகர் மாரியம்மன் கோயில் செயல் அலுவலராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோல, துறையூர் சப்தரிஷீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மேனகா திருச்சி கீழரண்சாலை பூலோகநாதர் சுவாமி கோயில் செயல் அலுவலராகவும், முசிறி கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் செயல் அலுவலர் நித்யாதிருச்சி பெரிய கடை வீதி பைரவநாதசுவாமி கோயில் செயல் அலுவலராகவும், சிவகிரி சொக்கலிங்கநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் கணேஷ்குமார் அம்பாசமுத்திரம் கிருஷ்ணசாமி வகையறா கோயில் செயல் அலுவலராகவும், ஜெயங்கொண்டம் கழுமலை நாதசுவாமி கோயில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி சங்கராபுரம் அரங்கநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் என மொத்தம் 13 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: