சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகார் குறித்து இயக்குனர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இயக்குனர் ஷங்கர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் ஒன்று அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஷங்கர் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.