தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஏரி ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட 480 பேருக்கு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டபணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்,ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.