சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று காலை விடுவித்தது. இதையடுத்து, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், மனிதபிமானத்தோடு போராடிய அனைவருக்கு நன்றி என்றார். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்வோம் என்றும் குயில்தாசன் கூறினார்.இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.