கீவ்: ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை பிடித்து தனி நாடாக அறிவிக்க, அது எடுத்து வரும் முயற்சிகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதன் மூலம், ரஷ்ய படைகளின் முன்னேற்றமும், வெற்றியும் தடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது.