சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படுமென சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாத இறுதி முதல் பயோ மெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு பின்பற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.