டெல்லி: நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21-ம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும். முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோக்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.