புதுடெல்லி: சண்டிகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணம் பறிப்பதற்காக போலி ரெய்டு நடத்திய வழக்கில் நான்கு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 4 பேரையும் டிஸ்மிஸ் செய்ய சிபிஐ இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்கு கடந்த 10ம் தேதி டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 4 பேர் வந்தனர். அவர்களுடன் வேறு சிலரும் வந்தனர். தொழிலதிபருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன. இதனால், அவரை கைது செய்வோம் என்று சிபிஐ அதிகாரிகள் மிரட்டினர். பின்னர், வலுக்கட்டாயமாக ஒரு காரில் அழைத்து சென்று அவரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.