கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 24-ம் தேதி 12 மீனவர்களும் கைதாகினர். 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என அண்மையில் நீதிபதி கூறியது சர்ச்சையானது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.