கவுகாத்தி: அமித்ஷாவை பிரதமர் என்றும், மோடியை உள்துறை அமைச்சர் என்றும் அசாம் முதல்வர் தவறுதலாக குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி கவுகாத்தியில் பாஜ பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘பிரதமர் அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று குறிப்பிட்டார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவரை பிரதமர் என்றும், மோடியை உள்துறை அமைச்சர் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.