வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில், பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. துணை தலைவர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், வாலாஜாபாத்தில் உள்ள 15 வார்டுகளிலும் சுகாதார பணிகள் மிகவும் தோய்வடைந்துள்ளன. இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வார்டு என பாரபட்சமின்றி முழு துப்புரவு பணியை வாரம் ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.