பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை ஆக்ரோசமாக துரத்தும் மக்னா யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் சேரம்பாடி டேன்டீ பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத்தோட்டம் பகுதியில் சுற்றித்திரிகிறது. இதனால் தோட்டத்தொழிலளார்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் சேரங்கோடு பகுதியில் ஒரு மக்னா யானையும் குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டம் பகுதியில் மிகவும் ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டுகிறது. இதனால் மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.