கடலூர்: கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுநகர் நத்தவெளி ரோடு பகுதியை சேர்ந்தவர், கார்த்திகேயன் மனைவி ரம்யா (27). இவர் கடலூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரும் கார்த்திகேயனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், கடந்த மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டில், கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா கடலூர் அருகே அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள, தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். வேறு வீடு பார்த்து விட்டு வந்து அழைத்து செல்வதாக கார்த்திகேயன், ரம்யாவிடம் கூறியுள்ளார்.