ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் புளியந்தாங்கல் கிராமம், ஏரிக்கோடியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தனர். அப்போது காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும் அந்தரத்தில் பறந்து வந்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி நேற்றிரவு முத்தாலம்மன் திருவீதி உலாவும், நாடகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.