காமரெட்டி: தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மினி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் நிஜாம் சாகர் மண்டலத்தில் உள்ள ஹசன்பள்ளி கேட் என்ற இடத்தில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர். படுகாயமடைந்த 20 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.