பழநி: அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சித்திரை மாத கடைசி 7 நாட்களும், வைகாசி மாத முதல் 7 நாட்களும் என 14 நாட்கள் அக்னி நட்சத்திர கழு திருவிழா நடைபெறும். விழா நாட்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் கிரிவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வரும் வருவது வழக்கம். இந்நிலையில் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக கிரிவீதியில் உள்ள சில கடைக்காரர்கள் தங்களது கடைகளின் எல்லைகளை ரோடுவரை நீட்டிப்பு செய்துள்ளனர்.