சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மாதவரம் சுதர்சனம் (திமுக), பெரும்புதூர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தளி டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ) ஆகியோர், ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்த தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி இறந்தது குறித்து பேசினர். அதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:, கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி மரணமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரன் மயக்க மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.