சென்னை: ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நேற்று பிளஸ் 2 தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று தமிழ்ப்பாட தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர். இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வில் இன்று பங்கேற்கின்றனர். இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.