'அறிவியல் பொய் சொல்லாது..பிரதமர் மோடி சொல்வார்'!: கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் பலி; 4.8 லட்சம் அல்ல..ராகுல் காந்தி விமர்சனம்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி அரசு 4.8 லட்சம் என பொய் சொல்வதாக ராகுல்காந்தி விமர்சனம் செய்திருக்கிறார். உலக சுகாதார அமைப்பு 2020-21ல் இந்தியாவில் 47 லட்சம் கொரோனா இறப்புகள் பதிவாகி உள்ளன என கூறியது. ஆனால் இதனை இந்தியா கடுமையாக மறுத்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கொரோனா தொற்று நோயால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர்.

அரசு கூறியது போல் 4.8 லட்சம் பேர் அல்ல என்று கூறியிருக்கிறார். அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வார் என்றும் ட்விட்டரில் ராகுல் குறிப்பிட்டிருக்கிறார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளித்து தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

Related Stories: