ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடம்பாக்கம், பள்ளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (28). இவருக்கும், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (26) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் வழக்கம்போல் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.