தஞ்சை: கிரீன் லீப் ஓட்டலுக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களில் சாப்பிடுவது வழக்கம். அதேபோல், நேற்று இரவு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களான பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.