பெங்களூரு: கர்நாடகாவில் பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்றில் மேசை, நாற்காலிகளுடன் சில மாணவர்களும் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹூப்ளி சுற்றுவட்டாரங்களில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. அப்போது சூறைக்காற்று அதிவேகமாக வீசியதால் நகரில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன. மாற்றங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. ஹூப்ளி விமான நிலையத்தில் ஊழியர்களுக்காக உள்ள உணவகத்தின் வெளியே போடப்பட்டிருந்த மேசை, நாற்காலிகள் காற்றில் பறந்தன. வித்யா நகர் என்ற இடத்தில் மழை காரணமாக இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, மாணவர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.