எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர். அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் : சு.வெங்கடேசன் இரங்கல்

விருதுநகர் : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் மறைவிற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது நேற்றிரவு. தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர். இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர். எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர். அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார்.செவ்வணக்கம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: