மும்பை: கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் திடீரென்று ஓரிரு வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. தற்போது, தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 ஆகும். இந்நிலையில், இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.