அரசியல் பாகுபாடு இல்லாமல் அரசு கல்லூரிகளை முதல்வர் வழங்கி வருகிறார்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ கே.பி.முனுசாமி(அதிமுக) பேசுகையில், ‘‘வேப்பனஹள்ளி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி இல்லை. இந்த தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி துவக்கவேண்டும்’’ என்றார்.இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘அரசியல் பாகுபாடு இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் கேட்டதற்கு மணப்பாறையில் ஒரு அரசு கலைக்கல்லூரியும், பாமக, சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் கல்லூரி வலியுறுத்திய நிலையில் கல்லூரிகள் தொடங்கி முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்’’ என்றார்.

Related Stories: