சென்னை: ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீட்டுக்குள் குண்டு பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ஆவடியில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படை பயிற்சிதளம் உள்ளது. இங்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு, நவீன ஆயுதங்களை கையாளுதல், கையெறி குண்டு வீசுதல், துப்பாக்கியுடன் கூடிய குண்டெறியும் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, வரைப்படக்கலை, நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும், வெடிபொருட்கள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வீரர் துப்பாக்கியால் சுட்ட குண்டு, (9 எம்எம்) எதிர்பாராதவிதமாக, அருகில் உள்ள முத்தாபுதுப்பேட்டை மிட்னமில்லி காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36), பெயின்டர். வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது. இதை அவர் கவனிக்கவில்லை.