முரசொலி அலுவலகம் குறித்து பேசிய வழக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆஜராக விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து  பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில்  உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு  வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்.பி ஆனதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. எல்.முருகன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் எல்.முருகன் வரும் 2ம் தேதி ஆஜராக விலக்கு அளித்து, வழக்கு விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.

Related Stories: