சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஆயிரம்விளக்கு டாக்டர் எழிலன் (திமுக) பேசியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத ஒதுக்கீடு நீதிமன்றத்துக்கு போகும்போது அதை பாதுகாத்த பெருமை எங்கள் முதல்வரை சாரும் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் இருந்துவிட்டு, நீங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டை சட்டரீதியாக பாதுகாத்து கொடுத்தவர் எங்கள் முதல்வர். நீட் விலக்கு மசோதாவுக்கு 2 முறை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.