சென்னை: பேரவையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பான விவாதத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: எப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் பெட்ரோல்-டீசலுக்கு வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. என்றைக்குமே உயர்த்திய வரலாறு இல்லை. கலைஞரின் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை; இந்த ஆட்சியில் ஒருமுறை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சி 2011-ல் முடியும்போது பெட்ரோலில் வரி, 14 ரூபாய் 47 பைசா. நாங்கள் 2021-ல் ஆட்சிக்கு வரும்போது 26 ரூபாய் 20 பைசா. முதல்வர் சொல்லி 3 ரூபாய் குறைத்த பிறகு, அவர்கள் 5 ரூபாய் குறைக்கும்போது, அதில் நாம் 13 சதவிதம் கூடுதலாக எடுப்பதன் காரணமாக இன்னும் 65 பைசா குறைத்த பிறகு, இன்றைக்கு நம்முடைய மாநிலத்தினுடைய வருமானம் 22 ரூபாய் 54 பைசா. அப்படியென்றால் சுமார் 50 சதவிதம்தான் நம்முடைய வரி இந்த 7 வருடத்தில் அதிகரித்திருக்கிறது.