சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர், தமிழக முதலமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ள 15வது உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை கிழக்கு மாவட்டத்திலுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளிலுள்ள வட்டக் கழக உறுப்பினர்கள், மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துதலைமைக் கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் கீழ்க்கண்ட இடங்களில் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.