கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், இவை பறிமுதல் செய்யப்பட்டு அப்பகுதியிலே கொட்டப்பட்டு வருகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதிக்குள் இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்கொட்டப்படுவதால், இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.