சென்னை: சட்டசபையில் எழுது பொருள் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் 160 குடியிருப்புகள் ரூ.34 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்படும் என கூறினார். மேலும் முதன்முறையாக அச்சுத்துறைக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 72 ஆயிரம் செலவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்.