கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதி முழுவதும் படுவேகமாக விவசாய பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக சோளம் பயிர் செய்ய விவசாயிகள் நிலங்களை நன்கு கோடை உழவு செய்து அத்துடன் இயற்கை உரங்களை நிலங்களில் தூவி சோளம் பயிர் செய்ய பாத்தி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை சந்தித்து பேசிய வகையில் விவசாயத்தைப் பொறுத்தவரை சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும்.