சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தமிழக, கர்நாடக மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்ததால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தமிழகம், கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சாலையாக திண்டுக்கல்- பெங்களூரு சாலை உள்ளது. இதில், 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி வாகன விபத்தில் பலியானதை அடுத்து இந்த பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு அண்மையில் கோர்ட் தடை விதித்தது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.