ஆலந்தூர்: கேரள மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பரங்கிமலை மாங்காளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் மார்க் டிகுரூஸ் (19), கடந்த சில நாட்களுக்கு முன், அந்த சிறுமிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிடபோவதாக அவர்களை மிரட்டியுள்ளார். இதுபற்றி சிறுமிகளின் பெற்றோர் கேரள மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, மார்க் டிகுரூஸை, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.