மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய திரு.நாட்ராயன் அவர்கள், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. நாட்ராயன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

Related Stories: