சென்னை: சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ (திமுக) பேசுகையில், `கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயம் அதிகமாக கொண்ட பகுதி. இந்த பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது. அதேபோல், பூச்செடிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. ஜவ்வரிசி தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையும், சென்ட் தயாரிக்க கூடிய சென்ட் தொழிற்சாலையும் அமைத்து தரவேண்டும். ஏற்கனவே சர்க்கரை ஆலை அமைப்பதற்காக 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி நிலுவையில் இருக்கிறது. அந்த நிலத்தை பயன்படுத்தி அந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஏற்கனவே, அங்கு சிப்காட் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த பகுதியிலும் தொழிற்சாலை அமைப்பதற்கு சரியாக இருக்கும். இதனை தொழிற்துறை அமைச்சர் செய்து கொடுக்க வேண்டும்’ என்றார்.