நாகர்கோவில்: கோடைகாலம் என்பதால் பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது குமரி மாவட்டத்திலும் காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது பகல் வேளைகளில் சாலையில் நடமாட முடியாத நிலை உள்ளது வெயில் காரணமாக காலை வேளையில் கோயில்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் பிரகாரத்தை வலம் வருவதில் பெரும் சிரமம் உள்ளது இதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி தரிசனம் செய்யும் வகையில் பிரகாரத்தை சுற்றி டேம் புரூப் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. வெள்ளை கலர் கொண்ட இந்த டேம் புரூப் பெயிண்ட் வீட்டின் மொட்டை மாடிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். இது வெயிலின் தாக்கத்தை உள்வாங்க கூடிய தன்மை கொண்டதாகும். டேம் புரூப் பெயிண்ட் பூசப்பட்ட பகுதியில் பக்தர்கள் நடமாடினால் அவர்களின் பாதங்கள் சூடேறாது அறநிலையத்துறை கோயில்களில் இந்த வசதியை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.