ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து கொரோனா தொற்று பரவத் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பெரிதாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவின் மிகப்பெரிய பொருளாதார நகரமாக கருதப்படும் ஷாங்காயில் சுமார் இரண்டரை கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்படுகிறது.