சென்னை: சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷன் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் எந்த அளவில் உள்ளது,’ என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பில் உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான சாலை.