சென்னை: ஊதுபத்தி விற்பனை செய்து வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அடித்து உதைத்த போதை காவலரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார்(39). தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு குடிபோதையில் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ஊதுபத்தி விற்கும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான திருச்சி கரியமங்கலத்தை சேர்ந்த விஜயகாந்த்(36), காரைக்கால் கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ்(28) ஆகிய 2 பேரும் ஓபிஎம் தெரு எங்குள்ளது என கேட்டுள்ளனர்.