நன்றி குங்குமம் தோழி
* சின்னச் சின்ன உளுந்து வடை, சிறிய வடிவத்திலான ஜிலேபியை வருவோருக்கு வழங்கலாம்.
- இல.வள்ளிமயில், மதுரை.நவராத்திரி செய்தி* பொம்மைக் கொலு வைப்பதற்கு படி இல்லாவிடில் வீட்டிலுள்ள மேஜை, பெஞ்ச், ஸ்டூல்கள், பலகைகள் ஏன் சூட்கேஸ்களைக்கூட ஒன்றின்முன் ஒன்றாக படிப்படியாக வருமாறு அடுக்கி வைத்து அதன்மேல் ஒரு வெள்ளை அல்லது வெளிர்நிற விரிப்பை விரித்தால் கொலுப்படி தயார்.* மலை செய்ய மண்ணைக் குழைப்பதற்கு பதில் ஒரு பெரிய பாத்திரத்தின் வெளிப்புறம் எண்ணெய் தடவி அதன்மேல் மலை வடிவத்தில் ‘ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸைக்’ கரைத்துக் கொட்டி காய்ந்தபின் பெயிண்ட் அடிக்கவும். இதை ஒருமுறை செய்தாலே போதும். பல ஆண்டுகள் உபயோகிக்கலாம்.* பழைய பொம்மைகளை சாதாரண அக்ரிலிக் அல்லது ஆயில் பெயிண்ட் கொண்டு டச்-அப் செய்தாலே புதிதுபோல ஆகிவிடும்.* கொலு முடிந்து பொம்மைகளை பத்திரப்படுத்தி வைக்கும்போது தெர்மாகோல், வைக்கோல், காகிதம், துணி போன்றவைகளைச் சுற்றி வைக்கவும்.* எல்லாவித சுண்டலுக்கும் தேங்காயுடன் மேலாக துருவிய கேரட் அல்லது பீட்ரூட் தூவினால் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் சத்து நிறைந்தது. * சுண்டலுடன் சிறிது பொடி செய்த சிப்ஸையும் கலந்தால் பேல் பூரிபோல கரகரப்பாக ருசியுடன் இருக்கும்.* கொலுப்படிக்கு முன் தாம்பாளங்களை வைத்து அவற்றில் பூக்கோலம், ரங்கோலி, தண்ணீர் மேல் கோலம், தண்ணீருக்கடியில் கோலம் என்று போட்டு அழகு செய்யவும்.* வெண்கல உருளிகளில் நீர் நிரப்பி அதில் ஓர் ஆஸ்ப்ரின் மாத்திரையைக் கரைய விட்டு பூக்களை மிதக்க விடுங்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.- எஸ். ராஜகுமாரி, சென்னை.பளிச் பளிச் பொம்மைகள்
* கொலு வைப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே பொம்மைகளை எடுத்து, ஆயில் பெயின்ட் தடவி வெயிலில் காய வைத்தால் புது பொம்மைகள்போல் பளிச்சிடும்.* நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு நாளும் சுண்டல் வழங்குவது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்தில் தோல் நோய் வர வாய்ப்பு உண்டு. சுண்டல் சாப்பிட்டால் சரும பாதிப்பு வராது. மேலும் சுண்டலில் புரோட்டீன் சத்தும் கிடைக்கும்.* மரப்பாச்சி பொம்மைகளுக்கு வார்னிஷ் பூசிவிட்டால் பளிச்சென்று மின்னும். தூசி படர்ந்தால் துடைத்து விடலாம். பெயிண்ட்டும் உதிராது.* பெட்டியிலிருந்து பொம்மைகளை எடுத்ததும் ஒரு துணியால் துடைத்துவிட்டு, கெரசினில் பஞ்சை முக்கியெடுத்து துடைத்து, சற்று நேரம் கழித்து விபூதி தடவி, துணியால் துடைத்தால் புதிதுபோல இருக்கும்.தொகுப்பு: ஆர். பத்மப்ரியா, திருச்சி.